search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தந்தை தகராறு"

    குடிபோதையில் தகராறு செய்த தந்தையை மகன் தட்டிக்கேட்டதால் ஆத்திரம் அடைந்த அவர் மகனின் கழுத்தை பிளேடால் அறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    திருச்சி:

    திருச்சி செந்தண்ணீர்புரம் கோவன் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 57) லாரி டிரைவர். இவரது மகன் மணிகண்டன். இந்நிலையில் சேகர் மது குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறில் ஈடுபட்டார். இதை மணிகண்டன் தட்டிக்கேட்டார். அப்போது தந்தை மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் கிரிக்கெட் மட்டையால் சேகரை தாக்கினார்.

    சேகர் பிளேடால் தனது மகன் மணிகண்டன் கழுத்தை அறுத்தார். அவர் வலி தாங்க முடியால் அலறினார். உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இது குறித்து பொன்மலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    திருக்கனூர் அருகே தந்தை மதுகுடித்துவிட்டு தாயிடம் தகராறு செய்ததால் வேதனை அடைந்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருக்கனூர்:

    திருக்கனூர் அருகே சுத்துக்கேணி காலனி தண்ணீர்தொட்டி தெருவை சேர்ந்தவர் அய்யனார் கூலித்தொழிலாளி. இவரது மனைவி கலையரசி. இவர்களது மகள் தமிழரசி (வயது24). அய்யனார் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். அதுபோல் சம்பவத்தன்று அய்யனார் மதுகுடித்துவிட்டு மனைவியை அடித்து உதைத்தார். பின்னர் அவர் மீண்டும் மதுகுடிக்க சென்று விட்டார்.

    தினமும் தந்தை மதுகுடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்ததால் தமிழரசி மனவேதனை அடைந்தார். இதையடுத்து அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தமிழரசி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் காட்டேரிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×